December 2016 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Monday, 12 December 2016

பகவத் கீதை சுட்டிக் காட்டும் இறைவன் யார் ?

December 12, 2016 0

                                                         || சிவாத்பரதரம் நாஸ்தி ||

சிலர்,பகவத் கீதையில் சுட்டிக் காட்டப்படும் இறைவன் விஷ்ணு என்று கூறுகின்ரனர்.ஆனால் இவர்கள் கூற்றுக்கு அந்த பகவத் கீதையே ஆதாரமாக இருக்க மறுத்துள்ளது.ஆம்,பகவத் கீதையில் கூறப்படும் இறைவன் உண்மையில் சிவபிரானேயாம்.பகவத் கீதையைக் கொண்டே இந்த உண்மையைப் பார்ப்போம் :

"அர்ஜுனா ! இயந்திரத்தில் ஏறிய பதார்த்தங்களென,எல்லா உயிர்களையும் மாயா சக்தியால் சுழற்றிக்கொண்டிருக்கும் ஈஸ்வரன் எல்லா உயிர்களின் இதயத்திலும் இருக்கிறான்" - (18:61)

"அர்ஜுனா ! அந்த ஈஸ்வரனையே எல்லாத் தன்மையாலும் சரணமாக அடை : அந்த ஈஸ்வரானுக்ரஹத்தால் உத்தமமான சாந்தியையும் நித்யாஸ்தானத்தையும் அடைவாயாக" - (18:62)

இந்த இரு வசனங்களால்,தனக்கு இறைவனாக விளங்கும் ஈஸ்வரன் எனும் பெயர்க்குரிய விஸ்வரூப சிவனையே சரணம் அடைவாயாக என்று அர்ஜுனனுக்கு அறிவுரைக் கூறினார்.ஸ்ரீ க்ருஷ்ணர்,சிவஹொம்பாவன யோகத்தில் இருந்து நீங்கி,ஜீவ நிலையில் உள்ளபோது,அர்ஜுனன் கேட்கும் கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.இதே போல் , பகவத் கீதை,8ஆம் அத்தியாயம்,முதல் ஸ்லோகத்தில்,அர்ஜுனன் "கிம்தத்ப்ரஹ்ம" (அந்த பிரம்மம் யாது ?) என்ற வினவிய போது, அதே அத்தியாயம்,மூன்றாம் ஸ்லோகத்தில் " அக்ஷரம் ப்ரஹ்ம பரமம்" (அழிவற்ற உத்தமமானது பிரம்மம்)  என்று விடையளிக்கிறார்.இங்கு "நானே உத்தமமான" பிரம்மம் என்று க்ருஷ்ணர் கூறவில்லை என்பதை கவனிக்க.

இப்படி சிவஹொம்பாவ யோகத்தில் இருந்து நீங்கியபோது, படர்க்கையிலும், சிவஹொம்பாவன யோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, தன்னிலையிலும் க்ருஷ்ணர் பதிலளிக்கிறார்.அவர் சிவஹொம்பாவனையில் இருந்தபோது, அபேத நிலையில் இருந்தபடியால் தன் ஆன்மாவை சிவனாகக் கருதி விடையளிக்கிறார்.சிவஹொம்பாவன யோகத்தில்,ஆன்மாவை சிவமாகக் கருதி அகப்பூசை செய்ய வேண்டும் என்பது மரபு.இதில் கைத்தேர்ந்த க்ருஷ்ணர்,அந்நிலையில் சிலசமயம் அர்ஜுனருக்கு பதிலளிக்கிறார்..

தனது சிவஹொம்பாவன நிலையை இந்த இரண்டு பகவத் கீதை வசனங்கள் மூலம் காட்டுகிறார் :

1. " எனது பரத்வம் அறியாத மூடர்கள் பூதமஹேஸ்வரனாக இருக்கும் என்னை மனிததேகத்தை ஆச்சிரயித்து இருப்பவனாக என்னை அவமதிக்கிறார்கள்" - (9:11)

2. "யாதவருள் க்ருஷ்ணனாகவும்,பாண்டவருள் அர்ஜுனனாகவும் இருக்கிறேன்" - (10:37)
இந்த வசனங்களால்,க்ருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் மேன்மை,மஹேஸ்வர விபூதியினால் என்று அறிக..சிவஹொம்பாவனையில் உள்ளவர் நாவிலி இருந்து "நானே பிரம்மம்" போன்ற வார்த்தைகள் வருவதால்,அவர்கள் தான் பிரம்மம் என்று சொல்லக் கூடாது.அவர்களுள் உள்ள சிவபிரானின் சொற்களாம் அவை.இது எது போல் எனில்,பேய் பிடித்தவன் சொல்லும் சொற்கள்,அவனது அல்லவாம்,பேயுடையதாம்..அதே போல்,சிவஹொம்பாவனா யோகத்தில் உள்ளவர் உதிரும் சொற்கள்,சிவபிரானின் சொற்களாம்.

இதே போல்,ப்ருஹதாரண்யக உபநிஷத் ,3ஆம் அத்யாயத்தில்,
"பிரம்மமாகிய இதனை அறிந்த வாமதேவ ருஷியானவர்,நான் மநு ஆனேன்;சூரியன் ஆனேன் என்றார்" என்று வருவதால், வாமதேவ ருஷி,க்ருஷ்ணர் போன்றொர் சிவஹொம்பாவன யோகத்தில் கைத்தேர்ந்தவர்கள் என்று நாம் அறியலாம்.ஆதலால் இவர்கள் "நானே ப்ரம்மம்" என்று கூறுவதால் இவர்கள் பிரம்மம் ஆகுவதில்லை,மாறாக அப்பொழுது இவர்களுள் விசேஷமாக எழுந்தருளியிருக்கும் பரசிவத்தின் வாக்யங்களேயாம்.

இவ்வாறே பகவத் கீதைக்கு பொருள்கொள்ள வேண்டும்.இல்லையேல் சுத்த அபத்தமாய் முடியும்.


Read More

சிவபிரான் அனுக்ரஹத்தினால் உயர்வு பெற்ற க்ருஷ்ணர்

December 12, 2016 1

                                                            || சிவாத்பரதரம் நாஸ்தி ||

ஸ்ரீ க்ருஷ்ண பிரான் பல மேன்மைகளை அடைந்தது சிவபிரான் வரத்தால் என்று மஹாபாரதம் கூறுகிறது.


"பிநாகம் என்ற வில்லைத் தரித்தவரும் ..ரிஷிகளால் துதிக்கப்பட்டவருமான தேவதேவர்..அந்த விஷ்ணுவின் பொருட்டு வரங்களைக் கொடுத்தார்...பகவான், ' நாராயணரே ! என் அனுக்கிரகத்தினால் மனிதர்கள் தேவர்கள் கந்தர்வர்கள் இவர்களைக் காட்டிலும் மனத்தினால் சிந்திக்கமுடியாத பலம் ஸ்வரூபம் இவைகளோடு கூடியவராக நீர் ஆகப்போகிறீர்..உம்மை தேவர்களும் அசுரர்களும் சர்ப்பங்களும் பிசாசங்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் ஸாபர்ணர்களும் அவ்வாறே நாகர்களும் இன்னும் பற்பல ஜாதிகளில் தோன்றிய எல்லா பிராணிகளும் ஸகிக்கமாட்டார்கள்..உம்மை யுத்தங்களில் தேவனாக இருந்தாலும் ஒருவனும் ஜெயிக்க மாட்டான் ..என் அனுக்ரஹத்தினாலே ஒருவனாவது உம்மை ஆயுதத்தினாலும் வஜ்ரத்தினாலும் நெருப்பினாலும் நீரினாலும் ஈரமானதாலும் உலர்ந்ததாலும் ஜங்கமத்தாலும் ஸ்தாவரத்தாலும் கையினாலும் காலாலும் கட்டையினாலும் மண்னாங்கட்டியினாலும் எவ்விதத்தாலும் ஹிம்சிக்க மாட்டான் ..மேலும் யுத்தத்தை நீர் அடைவீராயின் என்னை காட்டிலும் மேற்பட்டவராவீர்' என்று கூறினார்...பிறகு சூலபாணியான ருத்திரருடைய அனுக்ரஹத்தினாலே இவைமுதலான வரங்களைப் பெற்று அந்தத் தேவரே மாயையினால் உலகை மயக்கிக்கொண்டு சஞ்சரிக்கிறார்" -  துரோண பர்வம் ,202ஆம் அத்யாயம்

ஆக,உலகத்தவர் மத்தியில் க்ருஷ்ணர் பெரும்புகழ் கொண்டுள்ளது சிவபிரானது அனுக்ரஹத்தால் ஒழிய வேறில்லை என்பதை அறியலாம்..சிவபிரானை பூஜிப்பவருக்கு இறைவனான சிவபிரான் மேன்மைகளைக் கொடுப்பார் என்பதற்கு சிவனடியார் ஸ்ரீ க்ருஷ்ணர் ஓர் உதாரணம்.
Read More

தக்ஷன் வேள்வியை சிவபிரான் அழித்ததன் உட்கருத்து

December 12, 2016 0
                                                      || சிவாத்பரதரம் நாஸ்தி || 

நண்பர்களே, சிவபிரான் தக்ஷன் வேள்வியை தகர்த்த சரித்திரம் பெரும்பாலான புராணங்களிலும் இதிஹாசங்களிலும் கூறப்பட்ட ஒரு பிரபலியமான சம்பவம்.புராணேதிஹாசங்கள் மட்டுமின்றி வேதத்திலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி சங்க இலக்கியம் மற்றும் தேவாராதி திராவிட ஸ்ருதிகளிலும் (தமிழ் மறைகள்) வெகுவாக புகழப்பட்ட ஒரு விஷயம்.அனைத்து சாஸ்திர புகழ்ச்சிக்குட்பட்ட இச்சம்பவம் கூறும் உண்மை பொருள் என்ன ? அதைப் படிப்படியாக ஆராயலாம்.முதலில் வேதத்தில் தக்ஷன் வேள்வியை தகர்த்த சரித்திரத்தைப் பார்ப்போம்.


1.
பூஷாப்ராச்யததோருணத் தஸ்மாத்பூஷாப்ரபிஷ்டபா கோந்த கோஹிதம் தேவா அப்ருவந் | " - எஜுர் வேத தைத்திரிய சம்ஹிதை 
பொருள் : அவர்கள் பூஷன் உண்ணுமாறு அதனைக் கொடுத்தார்கள் ; ருத்திரர் அவன் பற்களை உடைத்தார் ; தேவர்கள் சிவபிரானை யஞ்ஞத்தினின்று விலிக்கச்,சிவபிரான் யஞ்ஞத்தை அழித்தார்

2.
"தத்பகாய தக்ஷினாத : ஆஸிநாய பர்யாஜஹ்ரு :| தத்பகோவீஷாஞ் சக்ரே தஸ்யாஷிணி நிர்ததாஹ " -சதபத ப்ராஹ்மணம்
பொருள் : வலப்பக்கத்தில் இருக்கும் பகனுக்கு அதைக் கொடுத்தார்கள் ; அவன் அதனைப் பார்த்தான் ; அவர் அவன் கண்களைத் தகித்தார்

3.
"யோதக்ஷயஜ்ஞே ஸூரசங்காத்  விஜித்ய விஷ்ணும் பபந்தோரக  பாசேந வீர: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து " - சரப உபநிஷத்
பொருள் : எந்த வீரர் தக்ஷயாகத்திலே தேவக்கூட்டங்களை ஜெயித்து விஷ்ணுவை நாகபாசத்தினால் (பாம்புக் கயிற்றால்) கட்டினாரோ ,அந்த ருத்திரருக்கு நமஸ்காரம் ஆகுக


மேலே உள்ள ஆதாரங்களில் முதல் வசனத்தில் , சிவபிரானை யாகத்திலிருந்து விலக்கி வைத்ததால்,யாகத்தை சிவபிரான் அழித்ததாக வருகிறது.யாகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால் ஏன் அதை அவர் அழிக்க வேண்டும் ? வேதம் இதற்கும் பதில் சொல்கிறது :

4.
"ஸம்ஸ்தயாகாநாம்ருத்ர : பசுபதி : கர்த்தா |
ருத்ரோயாகதேவ :| விஷ்ணுரத்வர்யு :| " - பாசுபத ப்ரஹ்ம உபநிஷத்

கருத்து :  ருத்ரன் யாகதேவன்,விஷ்ணு அத்வர்யு..
அத்வர்யு= யக்ஞம்  செய்விக்கும் ருத்விக்கு என்பவர்களில் ஒருவர்.இவர் பணி யாகம்
அங்ஙனம் நடத்த விதி சொல்லுவது.

ஆக,சிவபிரானே யாகத்தின் பலனை கொடுப்பவர்(யாக தேவன்)  என்றும்,அதனால் அவரையே யாகத்தின் மூலம் வழிபட வேண்டும் என்றும் வேதம் வலியுறுத்துகிறது.எந்த ஒரு வழிபாட்டின் மூலமும் சிவபிரானை,அவரது அடியவரான பிற தேவர்களுடன் சமப்படுத்தி வழிபடக் கூடாது என்பதை ஒரு ப்ரார்த்தனையாகவே வேதம் கூறுகிறது :


5.
"மாத்வாருத்ர பிக்ருதாமா நமோ நமோபிர்மாதுஷ்டு தீவ்ருஷபமாஸஹதி" - ருக்வேதம்

பொருள் : சுரச்சிரேஷ்ட பிரபுவாகிய ஹே ருத்திரமூர்த்தி ! உன்னை இதர தெய்வங்களோடு நமஸ்காரங்களாலும் ,துஷ்ட ஸ்தோத்திரங்களாலும் ,ஆஹ்வானங்களாலும் கோபிக்கச் செய்ய மாட்டோம்

புராணமும் இதே கருத்தை வேறுவிதமாகக் கூறுகிறது :

6.
"யோமஹாதேவ மந்யே ந்ஹீக தைவேநதுர்மதி: ஸக்ருத் ஸாதாரணம் ப்ரூயாத் ஸோந்த்ய ஜோநாந்த்யஜோந்த்யஜ:"

பொருள் : எவன் அந்நியமான ஹீன தெய்வங்களோடு சமானமாக ஒரு வார்த்தையாவது மஹாதேவரைப் பேசுவானோ ,அந்தத்துர்மதியே சண்டாளன் ஆவான் அன்றி லோகப் ப்ரதீயால் சண்டாளன் என்று அழைக்கப்படுபவன் சண்டாளான் ஆகான்

ஆக,தக்ஷயாக அழிப்புச் சம்பவம் மூலம்,வேதங்களும் புராணங்களும் கூறவரும் உட்கருத்து ,வழிபட தக்க ஒரே இறைவன் சிவபிரானேயாம்.அவனையே மட்டுமே யாகத்தின்மூலம் வழிபட வேண்டும் ,ஏனெனில் அவனே யாகதேவன். சிவபிரானை வழிபடாமல், கண்ட ஹீன தெய்வங்களை எல்லாம் வழிபடுவதன் மூலம் யாக பலன் கிட்டாது.ஆக,இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான யாகம் நடத்தப்பட்டும் பெரிதாக நன்மை ஏதும் ஏற்படவில்லை ஏனெனில்,சிவபிரானை யாகத்தின்மூலம் அவர்கள் வழிபடவில்லை.அதனால் தான் யாகப் பலனை சிவபிரான் அருளவில்லை.இனியேனும் யாகம் நடத்த இருப்பவர்கள் ,இதைக் கருத்தில் கொண்டு முழுமுதல் இறைவனான சிவபிரானையே யஞ்ஞத்தின் மூலம் வழிபடுக.அப்பொழுதான் பலன் கிட்டும்.இல்லையேல் நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு தான் பெருகும்.


Read More

விராட புருஷனும் சூத்திர வர்ணமும் மிலேச்சர்களின் புரட்டும் !!!

December 12, 2016 0
                                                   || சிவாத்பரதரம் நாஸ்தி ||

திராவிடக் கழகத்தவரும் முஸ்லிம்,கிருத்தவர் போன்ற அந்நிய மதத்தவர்களும் வேதத்தின் உண்மைகளை அறிவுப்பூர்வமாக தகர்க்க முடியாததால்,அதில் தவறு இருப்பது போல் சில புளுகுகளை கற்பித்துக்கொண்டு இருப்பார்கள்.அதில் ஒன்று தான் வேதம் ஏற்றத் தாழ்வை கற்பிக்கிறது எனும் புரட்டு.இதற்கு ஆதாரமாக இவர்கள் கூறும் பகுதி,புருஷ சூக்தம்.ரிக் வேத ,புருஷ சூக்தத்தில்,விராட புருஷனின் தலை,கை,தொடை,பாதங்களில் இருந்து முறையே பிராமணர்,க்ஷத்திரியர்,வைஸ்யர்,சூத்திரர் உருவாகினர் என்று உள்ளதாம்.சூத்திரர் காலில் இருந்து வந்ததாலும்,பிராமணர் தலையில் இருந்து வந்ததாலும் பிராமணரை உயர்த்தியும் சூத்திரரை தாழ்த்தியும் உள்ளதாம்.

முதலில், இவர்கள் சில கட்டுரைகளில் பிரம்மன் உறுப்புகளில் இருந்து நால்வர்ணம் இவ்வாறு உற்பத்தியாகிறது என்று கூறுகின்றனர்.இது தவறு.விராட புரஷன் என்பது இறைவனான பரசிவத்தையே குறிக்கிறது.புருஷ சூக்தத்தில் ,விராட புருஷனுக்கு ஆயிரக்கணக்கான தலைகள் முதலிய உறுப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.இது இறைவனது எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை,விஸ்வ ரூபத்தை குறிக்கிறது :

1.
"எங்கும் கண்ணையும் எங்கும் முகத்தையும் எங்கும் கையையும் எங்கும் அடியையும் உடையவராய் ,தமது கரங்களினாலும் சிறகுகளினாலும் மண்ணையும் விண்ணையும் இயைத்துப் படைப்பவர் அந்தக் கடவுள் ஒருவரே" - ரிக் வேதம் (10/81/3)

2.
"(சிவபெருமானாகிய) புருஷர் ஆயிரம் தலைகளையும் ஆயிரம் கண்களையும் ஆயிரம் கால்களையும் உடையவர்" -ஸ்வேதாஸ்வதார உபநிஷத் (3/14)

ஆக,விராட புருஷர் என்பவர் பிரம்ம தேவர் கிடையாது,மாறாக இறைவனையே குறிக்கிறது.இப்பொழுது புருஷ சூக்த கருத்துக்கு வருவோம்.

விராட புருஷராகிய இறைவன் (பரசிவம்) கால்களில் இருந்து சூத்திரர் வந்ததாக கூறப்படுவது எங்ஙனம் இழிவு ? முதலில்,இறைவனது வடிவில் உள்ள உறுப்புக்களில்,இந்த உறுப்பு உயர்ந்தது,இந்த உறுப்பு தாழ்ந்தது என்று வகைப்படுத்த முடியுமா ? இழிந்த உறுப்பை எப்படி இறைவன் கொண்டிருக்க முடியும் ? அது அவரது இறைத்தன்மைக்கே இழுக்கல்லவா ? அப்படியிருக்க எங்ஙனம் இறைவனது பாதம் இழிவானது ?

சைவம்,வைணவம் போன்ற இந்தியச் சமயங்களில்,இறைவனை புகழும்போது ,அவனது திருவடியைத் தானே புகழ்கிறோம் ? ஸ்ரீ ராஜராஜசோழருக்கு "சிவபாதசேகரன்" என்ற பட்டம் உள்ளது,அதன் அர்த்தம் "சிவபிரானின் திருவடிகளை மகுடமாகக் கொண்டவர்" .இறைவனது திருவடி போற்றி,இறைவனது திருவடி வாழ்க என்று தானே புகழ்கிறோம் ? எங்கேயாவது இறைவனது தலை போற்றி,இறைவனது கைகள் போற்றி,இறைவனது தொடைகள் போற்றி என்றா புகழ்கிறோம் ?ஆக,இறைவனது தலைமைத்துவத்தையும்,ஆன்மாக்களாகிய நம்முடைய அடிமைத்திறத்தையும் சுட்டிக் காட்டவே இறைத் திருவடிகளை புகழ்கிறோம்.அப்படிப்பட்ட இறைத் திருவடிகளில் இருந்து வந்ததாக கூறப்படும் சூத்திரர் எங்ஙனம் தாழ்ந்தவர் என்று வேதம் சித்தரிப்பதாக இந்த வேத விரோத மிலேச்சக் கூட்டங்கள் கூறுகின்றன ?

மேலும்,சைவ சமயத்தின் ஆதார நூல்களான 28 சிவாகமங்களில் ஒன்றான காமிகாகமம்,சிவபிரானின் திருவடிகள் என்று வர்ணிக்கப்படுகிறது. விராட புருஷனின் (சிவன்) திருவடி இழிவு என்றால், காமிகாகமும் இழிவு என்றல்லவா ஒதுக்கப்பட வேண்டும் ? ஆனால் பெரும்பாலான சிவாலயங்கள் காமிகாகமத்தை தான் பின்பற்றுகின்றன. அதனால் திரும்பத் திரும்ப இந்த மிலேச்சக் கூட்டங்களின் குற்றச்சாட்டு சரிந்து விழுந்துக்கொண்டே உள்ளன.

இறுதியாக, ஏன் விராட புருஷனின் உறுப்புகளில் இருந்து நால்வர்ணம் பிறந்ததாகக் கூறப்படுகிறது என்றால்,ஒரு மனிதனுக்கு அனைத்து உறுப்புக்களும் ஒற்றுமையாக இயங்கினால் தான் அவன் ஒழுங்காக வாழ முடியும்.அதே போல்,இச்சமூகத்தில் உள்ள நால்வர்ணத்தவருக்கும் ஒருத்தரின் தயவு இன்னொருத்தருக்குத் தேவை,ஆகையால் ஒற்றுமையாக வாழ வேண்டும்,அப்பொழுது தான் சமூகம் உயரும்.இதைத் தான் குறியிடாக(symbolic) புருஷ சூக்தம் கூறியது. இதை எல்லாம் அறியாத மிலேச்ச மூடர்கள்,இப்படி சிறுபிள்ளைத்தனமாக பிதற்றினால்,அவர்கள் முகத்தில் இந்த ஆதாரங்களை தூக்கி வீசுங்கள் !
Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்