"சிவ" நாம விளக்கம் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 30 July 2016

"சிவ" நாம விளக்கம்

முழுமுதல் தன்மை தமக்கே இருப்பதால்,இறைவன் "சிவன்" என்றழைக்கப்படுகிறான்."சிவ" என்றால் மங்கலம் என்றுப் பொருள்.

முற்றறிவு உடைமை,வரம்பில்லாத இன்பம் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்,தன்வயத்தன் ஆதல்,பேரருள் உடைமை,அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.அன்றியும் உயிர்களுக்குள்ள ஆணவம்,கன்மம்,மாயை எனும் மும்மலங்களையும் அநாதியே தன்பால் இன்மையாகிய சுத்த தன்மை உடையவர் ஆதலால் அவர் "சிவன்" எனப்பட்டார்.இதற்கு ஆதாரம்,வாயு சம்ஹிதை :


1) அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர :|
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வாந்த வேதிபி :||


2)அநாதிமல ஸம்ச் லேஷப்ராகபாவாத் ஸ்வபாவத :|
அத்யந்த பரிசுத்தத் மேத்யதோயம் சிவ உச்யதே :||



No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்